திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் அமையவிருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்புக்கு மத்தியில் அமையவிருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்புக்கு மத்தியில் அமையவிருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் சாலையில் உள்ள அம்மன் நகர், சோழன் நகர், ஜே ஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த சூழலில், அப்பகுதி பொதுமக்கள் புதிய டாஸ்மாக் அமைக்க கண்டனம் தெரிவித்து உள்ளனர். அப்பகுதியில், ஏற்கனவே ஒரு மதுபானக்கடை உள்ள நிலையில், மேலும் ஒரு மதுபானக்கடை அமைந்தால் அப்பகுதியில் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனவும் பள்ளி மற்றும் வேலைக்குச் சென்று வரக்கூடிய பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு அது இடையூறாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.

எனவே, அப்பகுதியில் மேலும்.ஒரு மதுபானக்கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...