கோவை: வால்பாறையில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களான படகு இல்லம், தாவரவியல் பூங்கா ஆகிய பணிகளை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆய்வு செய்தார்.
கோவை: வால்பாறையில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களான படகு இல்லம், தாவரவியல் பூங்கா ஆகிய பணிகளை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பொருளாதாரத்தை மேம்படுத்த. படகு இல்லம் தாவரவியல் பூங்கா போன்ற சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துமாறு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், தற்போது வால்பாறையில் தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை இன்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தாவரவியல் பூங்கா பணிகள் நடைபெறும் இடம், படகு இல்லம் பணிகள் நடைபெறும் இடம், தொகுப்பு வீடுகள் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார். மேலும், கூழாங்கல் ஆற்றில் மரண குழிகளை மூடும் பணிகளையும் அப்போது பார்வையிட்டார்.
மேலும், நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைவாக முடிக்கும்படி அறிவுறுத்தினார். பின், செய்தியாளர்களிடம் பேசும்போது, வரும் ஆண்டு துவக்கத்திலேயே தாவரவியல் பூங்கா, படகு இல்லம் பணிகள் முடிவுற்று செயலுக்கு வரும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், வட்டாட்சியர் ராஜா, அதிமுக நகரச் செயலாளர் மயில் கணேசன், வால்பாறை கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வி.அமீது சலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பொருளாதாரத்தை மேம்படுத்த. படகு இல்லம் தாவரவியல் பூங்கா போன்ற சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துமாறு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், தற்போது வால்பாறையில் தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை இன்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தாவரவியல் பூங்கா பணிகள் நடைபெறும் இடம், படகு இல்லம் பணிகள் நடைபெறும் இடம், தொகுப்பு வீடுகள் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார். மேலும், கூழாங்கல் ஆற்றில் மரண குழிகளை மூடும் பணிகளையும் அப்போது பார்வையிட்டார்.
மேலும், நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைவாக முடிக்கும்படி அறிவுறுத்தினார். பின், செய்தியாளர்களிடம் பேசும்போது, வரும் ஆண்டு துவக்கத்திலேயே தாவரவியல் பூங்கா, படகு இல்லம் பணிகள் முடிவுற்று செயலுக்கு வரும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், வட்டாட்சியர் ராஜா, அதிமுக நகரச் செயலாளர் மயில் கணேசன், வால்பாறை கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வி.அமீது சலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.