திருப்பூர்: திருப்பூர் பூலுவபட்டி அடுத்த அம்மன் நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் பூலுவபட்டி அடுத்த அம்மன் நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பூலுவபட்டி அடுத்த அம்மன் நகரில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அதே பகுதியில் புதிதாக டாஸ்மார்க் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இதுகுறித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் இடம் உரிய மனு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அம்மன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் இருக்கும் பட்சத்தில் தற்போது புதிதாக நேற்று இரவோடு இரவாக ஒரு டாஸ்மாக் கடையை திறந்துள்ளனர்.
மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளால் இப்பகுதியில் பெண்கள் குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த கடையால் மேலும் பிரச்சனைகள் அதிகரிக்கக் கூடும். எனவே, மாவட்ட நிர்வாகம் அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பூலுவபட்டி அடுத்த அம்மன் நகரில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அதே பகுதியில் புதிதாக டாஸ்மார்க் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இதுகுறித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் இடம் உரிய மனு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அம்மன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் இருக்கும் பட்சத்தில் தற்போது புதிதாக நேற்று இரவோடு இரவாக ஒரு டாஸ்மாக் கடையை திறந்துள்ளனர்.
மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளால் இப்பகுதியில் பெண்கள் குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த கடையால் மேலும் பிரச்சனைகள் அதிகரிக்கக் கூடும். எனவே, மாவட்ட நிர்வாகம் அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.