கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குளிர்பதன கிடங்குகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குளிர்பதன கிடங்குகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்கு அடுத்தப்படியாக வேலை வாய்ப்பிலும், வருவாய் ரீதியாகவும் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சிறுமுகை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, அன்னூர், காரமடை உள்ளிட்ட பல பகுதிகளிலும் தென்னை, காய்கறி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர் வகை விவசாயங்கள் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் அளவில் செய்யப்பட்டு வருகிறது.
இதில், காய்கறி விவசாயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், முட்டைகோஸ், பாகற்காய், புடலை, பீட்ரூட், அவரை உள்ளிட்டவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள், வீணாவதை தடுக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் ஒடையாம்பாளையத்தில், 500 மெட்ரிக் டன், கிணத்துக்கடவு பகுதியில் 500 மெட்ரிக் டன், சூலுாரில் 375 டன், காரமடை, தொண்டாமுத்துார், அன்னுார், பொள்ளாச்சி, செஞ்சேரி ஆகிய பகுதிகளில் தலா, 25 டன் கொள்ளளவு கொண்ட, குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இக்கிடங்குகள் முழுமையான பயன்பாட்டில் இல்லை எனவும் இதில், சில கிடங்குகள் தனியார் வசம் உள்ளதால், காய்கறிகளை சேமித்து வைக்க கட்டணம் அதிகமாக உள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:
கோவை மாவட்டத்தில், அன்னுார், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல இடங்களில், குளிர்பதன கிடங்குகள் முழுமையாக பயன்பாட்டில் இல்லை. அதிக கொள்ளளவுள்ள கிடங்குகளை, பெரியவியாபாரிகள் மட்டும் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் குளிர்பதன கிடங்குகள் தேவை.
மாவட்டத்தில் தாலுக்கா வாரியாக அல்லது விவசாயிகளுக்கு ஏற்றவாறு முக்கியமான இடங்களில் மேலும் பல குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும். அதனை தனியார் வசம் கொடுக்கக்கூடாது. தற்போது, சில குளிர்பதன கிடங்குகள் தனியார் வசம் உள்ளன. இதனால், கட்டணங்கள் அதிகமாகும், விவசாயிகளுக்கு பலன் இல்லை. காய்கறி விவசாயிகளுக்கு ஏற்றவாறு குளிர்பதன கிடங்குகள் புதிதாக அமைக்கப்பட்டால், சிறு விவசாயிகளும் அதிகம் பயன்பெறுவார்கள். பல கிலோ மீட்டர் தூரம் வரை காய்கறிகளை கொண்டுவந்து குளிர்பதன கிடங்குகளில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
எனவே, இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தார்.
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்கு அடுத்தப்படியாக வேலை வாய்ப்பிலும், வருவாய் ரீதியாகவும் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சிறுமுகை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, அன்னூர், காரமடை உள்ளிட்ட பல பகுதிகளிலும் தென்னை, காய்கறி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர் வகை விவசாயங்கள் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் அளவில் செய்யப்பட்டு வருகிறது.
இதில், காய்கறி விவசாயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், முட்டைகோஸ், பாகற்காய், புடலை, பீட்ரூட், அவரை உள்ளிட்டவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள், வீணாவதை தடுக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் ஒடையாம்பாளையத்தில், 500 மெட்ரிக் டன், கிணத்துக்கடவு பகுதியில் 500 மெட்ரிக் டன், சூலுாரில் 375 டன், காரமடை, தொண்டாமுத்துார், அன்னுார், பொள்ளாச்சி, செஞ்சேரி ஆகிய பகுதிகளில் தலா, 25 டன் கொள்ளளவு கொண்ட, குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இக்கிடங்குகள் முழுமையான பயன்பாட்டில் இல்லை எனவும் இதில், சில கிடங்குகள் தனியார் வசம் உள்ளதால், காய்கறிகளை சேமித்து வைக்க கட்டணம் அதிகமாக உள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:
கோவை மாவட்டத்தில், அன்னுார், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல இடங்களில், குளிர்பதன கிடங்குகள் முழுமையாக பயன்பாட்டில் இல்லை. அதிக கொள்ளளவுள்ள கிடங்குகளை, பெரியவியாபாரிகள் மட்டும் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் குளிர்பதன கிடங்குகள் தேவை.
மாவட்டத்தில் தாலுக்கா வாரியாக அல்லது விவசாயிகளுக்கு ஏற்றவாறு முக்கியமான இடங்களில் மேலும் பல குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும். அதனை தனியார் வசம் கொடுக்கக்கூடாது. தற்போது, சில குளிர்பதன கிடங்குகள் தனியார் வசம் உள்ளன. இதனால், கட்டணங்கள் அதிகமாகும், விவசாயிகளுக்கு பலன் இல்லை. காய்கறி விவசாயிகளுக்கு ஏற்றவாறு குளிர்பதன கிடங்குகள் புதிதாக அமைக்கப்பட்டால், சிறு விவசாயிகளும் அதிகம் பயன்பெறுவார்கள். பல கிலோ மீட்டர் தூரம் வரை காய்கறிகளை கொண்டுவந்து குளிர்பதன கிடங்குகளில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
எனவே, இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தார்.