நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் பரவலாக பெய்த மழையின் காரணமாக உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ராட்சத மரம் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் பரவலாக பெய்த மழையின் காரணமாக உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ராட்சத மரம் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் இரவு தொடங்கிய கனமழை, தொடர்ந்து காலை வரை நீடித்தது.
இந்நிலையில், உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு பகுதியில் அதிகாலை ராட்சத கற்பூர மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து மழை பெய்வதால் மாவட்டத்தில் குளிர் காலநிலை நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் இரவு தொடங்கிய கனமழை, தொடர்ந்து காலை வரை நீடித்தது.
இந்நிலையில், உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு பகுதியில் அதிகாலை ராட்சத கற்பூர மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து மழை பெய்வதால் மாவட்டத்தில் குளிர் காலநிலை நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.