நீலகிரியில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை..! குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் பரவலாக பெய்த மழையின் காரணமாக உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ராட்சத மரம் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் பரவலாக பெய்த மழையின் காரணமாக உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ராட்சத மரம் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் இரவு தொடங்கிய கனமழை, தொடர்ந்து காலை வரை நீடித்தது.

இந்நிலையில், உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு பகுதியில் அதிகாலை ராட்சத கற்பூர மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து மழை பெய்வதால் மாவட்டத்தில் குளிர் காலநிலை நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...