கோவை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (20), இவர் சென்னையில் தங்கி அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கோவை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (20), இவர் சென்னையில் தங்கி அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று கோவையில் உள்ள ஒரு கம்பெனியில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து ரயிலில் கோவைக்கு வந்தார். ரயிலில் பயணம் செய்த அவர், அயர்ந்து தூங்கிவிட்டார். இதனால், கோவையில் இறங்கவேண்டிய ரஞ்சித்குமார் மேட்டுப்பாளையத்தில் தான் இறங்கியுள்ளார்.
பின், அங்கு இறங்கி தனது உடமைகளை சரி பார்த்த போது, அவரது லேப்டாப் வைத்திருந்த பேக் காணாமல் போனது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த, ரஞ்சித்குமார், மீண்டும் கோவை ரயில் நிலையத்திற்கு வந்து, இரயில்வே போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அவரது புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, இரண்டாவது பிளாட்பாரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த போலீஸார், விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பீளமேட்டை சேர்ந்த சுரேஷ்குமார் (24) என்பதும், தச்சு தொழிலாளியாக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. அவர் ரஞ்சித்குமாரின் பேக்கை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, போலீசார் 379-வது பிரிவில் அவரை கைது செய்து அவிநாசி கிளை சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.
இவர் நேற்று கோவையில் உள்ள ஒரு கம்பெனியில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து ரயிலில் கோவைக்கு வந்தார். ரயிலில் பயணம் செய்த அவர், அயர்ந்து தூங்கிவிட்டார். இதனால், கோவையில் இறங்கவேண்டிய ரஞ்சித்குமார் மேட்டுப்பாளையத்தில் தான் இறங்கியுள்ளார்.
பின், அங்கு இறங்கி தனது உடமைகளை சரி பார்த்த போது, அவரது லேப்டாப் வைத்திருந்த பேக் காணாமல் போனது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த, ரஞ்சித்குமார், மீண்டும் கோவை ரயில் நிலையத்திற்கு வந்து, இரயில்வே போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அவரது புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, இரண்டாவது பிளாட்பாரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த போலீஸார், விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பீளமேட்டை சேர்ந்த சுரேஷ்குமார் (24) என்பதும், தச்சு தொழிலாளியாக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. அவர் ரஞ்சித்குமாரின் பேக்கை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, போலீசார் 379-வது பிரிவில் அவரை கைது செய்து அவிநாசி கிளை சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.