கோவை: சூலூர் விமானப்படை தொழில்நுட்ப பிரிவில் தர்மபுரியை சேர்ந்த முனியப்பன் (32), என்பவர் வேலை செய்து வந்தார். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
கோவை: சூலூர் விமானப்படை தொழில்நுட்ப பிரிவில் தர்மபுரியை சேர்ந்த முனியப்பன் (32), என்பவர் வேலை செய்து வந்தார். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
முனியப்பனுக்கும் செல்வராணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட செல்வராணி தனது சொந்த ஊரான ஆத்தூருக்கு சென்றுள்ளார். பின்னர், அவர் ஊருக்கு திரும்பிய நிலையில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால், செல்வராணி கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், முனியப்பன் வேதனை அடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 174 பிரிவின் கீழ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முனியப்பனுக்கும் செல்வராணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட செல்வராணி தனது சொந்த ஊரான ஆத்தூருக்கு சென்றுள்ளார். பின்னர், அவர் ஊருக்கு திரும்பிய நிலையில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால், செல்வராணி கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், முனியப்பன் வேதனை அடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 174 பிரிவின் கீழ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.