திருப்பூர்: திருப்பூரில் முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில் கடந்த 3 மாதகாலமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் குடிப்பதற்குக் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் நிலவி வருவதால் உடனடியாக முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து, மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில் கடந்த 3 மாதகாலமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் குடிப்பதற்குக் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் நிலவி வருவதால் உடனடியாக முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து, மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.