கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (50) கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த 14-ந் தேதி இவர் துடியலூர் கவுண்டர் மில் பேருந்து நிறுத்தம் அருகே குடிபோதையில் நின்றிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கனகராசுக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பின்னர், இதுகுறித்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மூன்று நாட்களுக்கு பிறகு பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கோவை சாய்பாபா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (50) கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த 14-ந் தேதி இவர் துடியலூர் கவுண்டர் மில் பேருந்து நிறுத்தம் அருகே குடிபோதையில் நின்றிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கனகராசுக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பின்னர், இதுகுறித்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மூன்று நாட்களுக்கு பிறகு பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.