கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 1900க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன, என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 1900க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன, என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனிடையே அக்குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில், குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது, அங்கு காலியாக உள்ள வீடுகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடிக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, சுமார் 1900 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன எனவும் மீதம் உள்ள வீடுகளை இடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது, என்று தெரிவித்துள்ளனர்.
கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனிடையே அக்குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில், குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது, அங்கு காலியாக உள்ள வீடுகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடிக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, சுமார் 1900 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன எனவும் மீதம் உள்ள வீடுகளை இடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது, என்று தெரிவித்துள்ளனர்.