திருப்பூர்: திருப்பூரில் உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளைஞர் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளைஞர் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஹர்சத் என்பவரது தந்தை முகமது மைதீன் கடந்த 2019ம் ஆண்டு இறந்த நிலையில் ஹர்சத் தந்தை நடத்தி வந்த சுல்தானியா பள்ளிவாசலுக்குச் சொந்தமான ஜவுளி கடை வீதியில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள ஸ்டார் பிரிண்டர்ஸ் என்ற கடையை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஹர்ஷத்தின் தாயார் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில் தனியாக கடை நடத்தி வந்த தனக்கு, தந்தையின் தம்பிகளான உசைன் மைதீன் மற்றும் அப்பாஸ் மைதீன் ஆகியோர் தன்னை கடைக்கு வர கூடாது எனவும் சொந்த ஊரை விட்டு வெளியேறும்படியும், மீறி வந்தால் கொன்றுவிடுவதாக மிரட்டி வருவதாக தெரிவித்தார்.

மேலும், தனக்கு வாழ்வாதாரம் இல்லாத சூழ்நிலையில் கடை நடத்த மற்றும் சொந்த ஊரில் வாழ பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் சித்தப்பாக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முகமது ஹர்சத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஹர்சத் என்பவரது தந்தை முகமது மைதீன் கடந்த 2019ம் ஆண்டு இறந்த நிலையில் ஹர்சத் தந்தை நடத்தி வந்த சுல்தானியா பள்ளிவாசலுக்குச் சொந்தமான ஜவுளி கடை வீதியில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள ஸ்டார் பிரிண்டர்ஸ் என்ற கடையை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஹர்ஷத்தின் தாயார் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில் தனியாக கடை நடத்தி வந்த தனக்கு, தந்தையின் தம்பிகளான உசைன் மைதீன் மற்றும் அப்பாஸ் மைதீன் ஆகியோர் தன்னை கடைக்கு வர கூடாது எனவும் சொந்த ஊரை விட்டு வெளியேறும்படியும், மீறி வந்தால் கொன்றுவிடுவதாக மிரட்டி வருவதாக தெரிவித்தார்.
மேலும், தனக்கு வாழ்வாதாரம் இல்லாத சூழ்நிலையில் கடை நடத்த மற்றும் சொந்த ஊரில் வாழ பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் சித்தப்பாக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முகமது ஹர்சத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தார்.