கோத்தகிரி அருகே கக்குச்சி கிராமத்தில் கிணற்றில் விழுந்த சிறுத்தை இரண்டு நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு!

நீலகிரி: கோத்தகிரி பகுதியில் உள்ள கக்குச்சி கிராமத்தில் குடிநீருக்கு பயன்படுத்தும் கிணற்றில் விழுந்திருந்த சிறுத்தை இரண்டு நாட்களுக்குப் பின் இன்று சடலமாக மீட்கப்பட்டது.


நீலகிரி: கோத்தகிரி பகுதியில் உள்ள கக்குச்சி கிராமத்தில் குடிநீருக்கு பயன்படுத்தும் கிணற்றில் விழுந்திருந்த சிறுத்தை இரண்டு நாட்களுக்குப் பின் இன்று சடலமாக மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சிப் பகுதியினை சுற்றிலும் வனப் பகுதிகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து, அங்குள்ள கிணற்றின் குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அப்பகுதி கிராம மக்கள் இன்று பார்த்துள்ளனர்.

அப்பொழுது, திறந்த நிலையில் இருந்த கிணற்றில் விழுந்துள்ள சிறுத்தை தப்பிப்பதற்கு மின்மோட்டாரின் ஒயர்களை கடித்துள்ளதும் பின்னர் அது இறந்துள்ளதும் தெரியவந்தது.

பின்னர், இது குறித்து வனத்துறையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையின் சடலத்தை மீட்டனர்.



பிரேதப் பரிசோதனைக்குப் பின் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...