கோத்தகிரி அருகே கக்குச்சி கிராமத்தில் கிணற்றில் விழுந்த சிறுத்தை இரண்டு நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு!

நீலகிரி: கோத்தகிரி பகுதியில் உள்ள கக்குச்சி கிராமத்தில் குடிநீருக்கு பயன்படுத்தும் கிணற்றில் விழுந்திருந்த சிறுத்தை இரண்டு நாட்களுக்குப் பின் இன்று சடலமாக மீட்கப்பட்டது.


நீலகிரி: கோத்தகிரி பகுதியில் உள்ள கக்குச்சி கிராமத்தில் குடிநீருக்கு பயன்படுத்தும் கிணற்றில் விழுந்திருந்த சிறுத்தை இரண்டு நாட்களுக்குப் பின் இன்று சடலமாக மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சிப் பகுதியினை சுற்றிலும் வனப் பகுதிகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து, அங்குள்ள கிணற்றின் குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அப்பகுதி கிராம மக்கள் இன்று பார்த்துள்ளனர்.

அப்பொழுது, திறந்த நிலையில் இருந்த கிணற்றில் விழுந்துள்ள சிறுத்தை தப்பிப்பதற்கு மின்மோட்டாரின் ஒயர்களை கடித்துள்ளதும் பின்னர் அது இறந்துள்ளதும் தெரியவந்தது.

பின்னர், இது குறித்து வனத்துறையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையின் சடலத்தை மீட்டனர்.



பிரேதப் பரிசோதனைக்குப் பின் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...