கோவை: லாரியில் பயணம் செய்த போது டிரைவர் பிரேக் போட்டதால் தவறி விழுந்த வடமாநில வாலிபர், கோவையில் பரிதாபமாக பலியானார்.
கோவை: லாரியில் பயணம் செய்த போது டிரைவர் பிரேக் போட்டதால் தவறி விழுந்த வடமாநில வாலிபர், கோவையில் பரிதாபமாக பலியானார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிக்காராம் லிம்பு (20), ஜெயேந்திரா தாஸ் (21), இவர்கள் 2 பேரும் பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் அருகே உள்ள நல்லாம் பள்ளியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை, விக்காராம் லிம்பு ஜெயச்சந்திர தாஸ் ஆகியோர் நிறுவனத்தில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி மேல் அமர்ந்து சென்றனர்.
அப்போது, லாரி பூசாரிபட்டி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ரெண்டு பேரும் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். அதைப் பார்த்த, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக விக்காராம் விம்பு உயிரிழந்தார்.
இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிக்காராம் லிம்பு (20), ஜெயேந்திரா தாஸ் (21), இவர்கள் 2 பேரும் பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் அருகே உள்ள நல்லாம் பள்ளியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை, விக்காராம் லிம்பு ஜெயச்சந்திர தாஸ் ஆகியோர் நிறுவனத்தில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி மேல் அமர்ந்து சென்றனர்.
அப்போது, லாரி பூசாரிபட்டி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ரெண்டு பேரும் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். அதைப் பார்த்த, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக விக்காராம் விம்பு உயிரிழந்தார்.
இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.