கோவை: சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதனமான முறையில் இடுப்பில் சுற்றி வந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.
கோவை: சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதனமான முறையில் இடுப்பில் சுற்றி வந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.
சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் நூதனமான முறையில் இடுப்பில் ரசாயன பேஸ்ட் கலந்து சுற்றிவந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். கடத்தி வந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். ஒரே நாளில் ஒரு கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வளைகுடா நாடான சார்ஜா கோவை இடையே ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோவைக்கு வந்தது.
இந்த விமானத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, விமானத்தில் வந்து இறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, பயணிகள் 2 பேர் நூதன முறையில் தங்கத்தைப் பொடியாக்கி சில ரசாயன பேஸ்ட் கலந்து ஸ்கேனர் தெரியாத அளவுக்கு தங்களது இடுப்பு பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்களிடமிருந்து 1.2 கிலோ கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 62 லட்சத்து 66 ஆயிரம் 2 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் தங்கத்தை யார் கொடுத்தது? யார் இடம் கொடுப்பதற்காக கடத்தி வந்தார்கள்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், அந்த விமானத்தில் வந்த ஐந்து பயணிகளிடம் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் செய்த சோதனையில் ரூபாய் 46 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் பிற சரக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனிடையே, நேற்று ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் மொத்தம் 1 கோடியே 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் விமான நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் நூதனமான முறையில் இடுப்பில் ரசாயன பேஸ்ட் கலந்து சுற்றிவந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். கடத்தி வந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். ஒரே நாளில் ஒரு கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வளைகுடா நாடான சார்ஜா கோவை இடையே ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோவைக்கு வந்தது.
இந்த விமானத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, விமானத்தில் வந்து இறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, பயணிகள் 2 பேர் நூதன முறையில் தங்கத்தைப் பொடியாக்கி சில ரசாயன பேஸ்ட் கலந்து ஸ்கேனர் தெரியாத அளவுக்கு தங்களது இடுப்பு பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்களிடமிருந்து 1.2 கிலோ கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 62 லட்சத்து 66 ஆயிரம் 2 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் தங்கத்தை யார் கொடுத்தது? யார் இடம் கொடுப்பதற்காக கடத்தி வந்தார்கள்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், அந்த விமானத்தில் வந்த ஐந்து பயணிகளிடம் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் செய்த சோதனையில் ரூபாய் 46 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் பிற சரக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனிடையே, நேற்று ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் மொத்தம் 1 கோடியே 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் விமான நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.