கோவை: கோவையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையில் இன்று அதிகாலை மதுக்கரை மரப்பாலம் கீழே போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கே.டி.எம் பைக்கில் இருவர் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தனர்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் இரண்டு கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிய வந்தது. உடனே அவர்களிடம் இருந்த கஞ்சாவை மீட்டு இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை செய்ததில் திருச்சூர், பாலகிபரம்பு, கல்லூர் அஞ்சல், முரளி மகன் அகில் (20) என்பதும், திருச்சூர், தெக்குமுரி, மாகோது வீடுட பகுதியில் வசிக்கக்கூடிய சாஜன் மகன் சாரோன் (20) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இவர்கள் ஓட்டி வந்த கே.டி.எம் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் திருச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையில் இன்று அதிகாலை மதுக்கரை மரப்பாலம் கீழே போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கே.டி.எம் பைக்கில் இருவர் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தனர்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் இரண்டு கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிய வந்தது. உடனே அவர்களிடம் இருந்த கஞ்சாவை மீட்டு இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை செய்ததில் திருச்சூர், பாலகிபரம்பு, கல்லூர் அஞ்சல், முரளி மகன் அகில் (20) என்பதும், திருச்சூர், தெக்குமுரி, மாகோது வீடுட பகுதியில் வசிக்கக்கூடிய சாஜன் மகன் சாரோன் (20) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இவர்கள் ஓட்டி வந்த கே.டி.எம் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் திருச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.