வால்பாறை அதிமுக கிளை செயலாளர்களுக்கு தீபாவளி பரிசு..! கஸ்தூரி வாசு எம்எல்ஏ வழங்கினார்!

கோவை: வால்பாறை அதிமுக கிளை செயலாளர்களுக்கு தீபாவளி பரிசுகளை எம்எல்ஏ கஸ்தூரி வாசு வழங்கினார்.


கோவை: வால்பாறை அதிமுக கிளை செயலாளர்களுக்கு தீபாவளி பரிசுகளை எம்எல்ஏ கஸ்தூரி வாசு வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு அதிமுக தீவிரமாக கட்சி பணியாற்றி வருகிறது கட்சியின் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அதிமுக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு சிறப்பு செயலாக்கத் திட்டம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களின் சார்பாக வால்பாறை பகுதியிலுள்ள கிளை கமிட்டிகள் வார்டு கமிட்டிகள் நிர்வாகிகளுக்கு இன்று நடைபெற்ற கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசுவால் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.



அதன்படி, வார்டு செயலாளருக்கு ரூபாய் 15,000ம், கிளை செயலாளருக்கு ரூ 7,000ம், துணை செயலாளருக்கு 5000ம் ரொக்கமும், தலா ஒரு வேஷ்டி சட்டை துணி, ஒரு சேலை தீபாவளி அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இக்கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, நகர செயலாளர் மயில் கணேசன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் விஜயகுமார், எம்ஜிஆர் மன்ற செயலாளர் தோப்பு அசோகன், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வி அமீது வாசு, பொன் கணேஷ், சலாவுதீன், எஸ்.கே.எஸ் பாலு லோகேஷ், எம்.ஆர்.எஸ் மோகன் வழக்கறிஞர் ஆர்.ஆர்.பெருமாள் உட்பட 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...