துப்பாக்கி தோட்டாக்களுடன் விமானத்தில் பயணம் செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் மயூரா ஜெயக்குமாரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை!

சென்னை: துப்பாக்கி குண்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் மயூரா ஜெயக்குமாரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



சென்னை: துப்பாக்கி குண்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் மயூரா ஜெயக்குமாரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராகவும், காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் உள்ளவர் மயூரா ஜெயக்குமார். 

இந்நிலையில், அவர் இன்று காலை சென்னையில் இருந்து கோவை வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அவர் இன்டிகோ விமானத்தில் பதிவு செய்திருந்தார். அந்த விமானம் 5.30க்கு புறப்படுவதாக இருந்தது. 

அப்போது, மயூரா ஜெயக்குமார் கொண்டுவந்த சூட்கேசை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் 15 தோட்டாக்கள் இருந்தன. உடனடியாக அதனை கைப்பற்றி நீங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியாது. உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். 

அதனை தொடர்ந்து, துப்பாக்கிக்கான அரசு அனுமதி என்னிடம் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். அவைகள் அனைத்தும் சரியாக உள்ளதா? எதற்காக 15 தோட்டாக்கள் கொண்டு வந்தீர்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...