பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் அரிசியை பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இன்று பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி - சோளபாளையம் கிராமம் வழியாக, சந்தேகத்திற்கிடமாக வந்த காரை, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிறுத்தினர். ஆனால், காரை ஒட்டி வந்த மர்ம நபர்கள் பொது மக்களை கண்டதும், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, தப்பிச் சென்றனர்.

காரில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த அதிகாரிகள், காரில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, காரின் உரிமையாளர் மற்றும் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் அரிசியை பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இன்று பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி - சோளபாளையம் கிராமம் வழியாக, சந்தேகத்திற்கிடமாக வந்த காரை, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிறுத்தினர். ஆனால், காரை ஒட்டி வந்த மர்ம நபர்கள் பொது மக்களை கண்டதும், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, தப்பிச் சென்றனர்.

காரில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த அதிகாரிகள், காரில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, காரின் உரிமையாளர் மற்றும் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.