பொள்ளாச்சியில் இருந்து காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் அரிசியை பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இன்று பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி - சோளபாளையம் கிராமம் வழியாக, சந்தேகத்திற்கிடமாக வந்த காரை, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிறுத்தினர். ஆனால், காரை ஒட்டி வந்த மர்ம நபர்கள் பொது மக்களை கண்டதும், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, தப்பிச் சென்றனர். 



காரில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த அதிகாரிகள், காரில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, காரின் உரிமையாளர் மற்றும் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...