கோவையில் ஆசிரியையிடம் நகை பறிப்பு; மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி கைவரிசை

கோவை:கோவை சிவானந்தபுரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியை பின் தொடர்ந்து வந்து நகையை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை:கோவை சிவானந்தபுரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியை பின் தொடர்ந்து வந்து நகையை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி வேல்கனி (வயது 40), தனியார் பள்ளி ஆசிரியை. இவர், நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை பஸ்ஸில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஆசிரியையை கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தார்.

அதிர்ச்சியடைந்த வேல்கனி, சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பே வழிப்பறி கொள்ளையன் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...