கோவை:கோவை சிவானந்தபுரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியை பின் தொடர்ந்து வந்து நகையை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:கோவை சிவானந்தபுரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியை பின் தொடர்ந்து வந்து நகையை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி வேல்கனி (வயது 40), தனியார் பள்ளி ஆசிரியை. இவர், நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை பஸ்ஸில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஆசிரியையை கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தார்.
அதிர்ச்சியடைந்த வேல்கனி, சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பே வழிப்பறி கொள்ளையன் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி வேல்கனி (வயது 40), தனியார் பள்ளி ஆசிரியை. இவர், நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை பஸ்ஸில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஆசிரியையை கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தார்.
அதிர்ச்சியடைந்த வேல்கனி, சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பே வழிப்பறி கொள்ளையன் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.