கோவையில் நண்பரை அடித்து கொன்று விட்டு விடிய விடிய பிணத்துடன் தூங்கிய நபர் கைது

கோவை: கோவையில் வாலிபர் ஒருவர் இரத்த காயத்துடன் இறந்து கிடந்த சம்பவம் தற்போதுகொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. நண்பரை அடித்து கொன்று விட்டு விடிய விடிய பிணத்துடன் தூங்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவையில் வாலிபர் ஒருவர் இரத்த காயத்துடன் இறந்து கிடந்த சம்பவம் தற்போதுகொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. நண்பரை அடித்து கொன்று விட்டு விடிய விடிய பிணத்துடன் தூங்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தில் ஒர்க்ஷாப் தொழிலாளியான திருப்பதி (வயது 38), என்பவர் கடந்த 7ஆம் தேதி அவரது வீட்டில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

உடலை கைப்பற்றிய பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திருமணமாகாத திருப்பதி, தனியே வசித்து வந்ததும் இவரது வீட்டிற்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த திருமுருகன் (45) என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

திருமுருகன் தொப்பம்பட்டி பிரிவில் உள்ள ஒர்க்ஷாப்பில் தங்கி வேலை செய்து வருகிறார். அதே, ஒர்க்ஷாப்பில் தான் கொலையான திருப்பதியும் வேலை செய்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி திருப்பதியின் வீட்டில் மது குடித்து வந்துள்ளனர் .

இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி வழக்கம்போல் இருவரும், திருப்பதியின் வீட்டில் மது மற்றும் கஞ்சா குடித்தனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த திருமுருகன் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து திருப்பதியின் தலையில் அடித்துள்ளார்.

இதில், திருப்பதி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஆத்திரம் தீராத திருமுருகன் அருகில் இருந்த பெட்ஷீட்டை எடுத்து திருப்பதியின் கழுத்தை இறுக்கிக் உள்ளார். தொடர்ந்து, போதையில் விடிய விடிய பிணத்துடன் படுத்து தூங்கிய திருமுருகன் விடிந்ததும், தனது நண்பரை கொலை செய்ததை அறிந்து தப்பி ஓடிவிட்டார்.

மர்மமான முறையில், திருப்பதி இறந்த சம்பவதை விசாரித்து வந்த பெ நா போலீசார், தொப்பம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த திருமுருகனை போலீசார் விசாரணை நடத்தியதில், மேற்கண்ட விவரம் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.

பின்னர், அவர் மீது 302, 506 (1)ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...