குடிபோதையில் தகராறு; சாப்பாடு கொடுக்க மறுத்த மனைவிக்கு சரமாரியான கத்திகுத்து...!

கோவை: கோவை மதுக்கரை குரும்பபாளையம் அண்ணா வீதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 37), லாரி டிரைவர். இவரது மனைவி செல்லம்மாள் (வயது 30), இவர்களுக்கு இளங்கோ (20) என்ற மகன் உள்ளார்.



கோவை: கோவை மதுக்கரை குரும்பபாளையம் அண்ணா வீதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 57), லாரி டிரைவர். இவரது மனைவி செல்லம்மாள் (வயது 53), இவர்களுக்கு இளங்கோ (26) என்ற மகன் உள்ளார்.

இந்தநிலையில், ஜனநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று, ஜெகநாதன் வேலைக்கு சென்றுவிட்டு இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்ததால், மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர், ஜெகநாதன் அவர் மனைவியிடம் சாப்பாடு போடும்படி கேட்டுள்ளார், அவர் குடித்துவிட்டு வந்ததால் சாப்பாடு போட அவர் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஜெகநாதன், மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு, பின் கத்தியை எடுத்து குத்தியுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மகன் இளங்கோ, தாய் செல்லம்மாளை மீட்டு மதுக்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, இளங்கோ அளித்த புகாரின் பேரில் மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகநாதனை 307 பிரிவின் கீழ், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...