தமிழர்களுக்கு துரோகம் செய்த திமுகவிற்கு மக்களிடம் ஓட்டு கேட்கும் தகுதி இல்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவு மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்கள் சார்பில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவு மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்கள் சார்பில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.



சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.



கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "மத்தியிலும், மாநிலத்திலும் திமுக ஆட்சியிலிருந்த போது, இலங்கைத்தமிழர், முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சனை போன்ற எந்த பிரச்சனைகளையும் தீர்க்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு துரோகம் விளைவித்தது, திமுக தான். தமிழகத்திற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத திமுக, இன்றைக்கு 7 தமிழர் விடுதலை பற்றி பேசுகின்றனர். மக்களிடம் ஓட்டு கேட்பதற்கும் திமுகவிற்கு தகுதி இல்லை", என்றார்.

"கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி போன்ற பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றார்கள். ஆனால், இன்று கொரோனா காலத்திலும், மாவட்டம் தோறும் சென்று மக்கள் நலப் பணிகளை செய்து வரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளார். எனவே, வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சர் ஆவார்", என்று தெரிவித்தார்.

கூட்டத்தில், கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...