கோவையில் நாளை முதல் கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி திரையரங்குகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்

கோவை: எட்டு மாதங்களுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவையில் நாளை முதல் கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி திரையரங்குகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: எட்டு மாதங்களுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவையில் நாளை முதல் கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி திரையரங்குகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் நாளை முதல் செயல்பட உள்ளன.

கோவை மாவட்டத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்ட திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.



இதற்காக, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளாக திரையரங்குகள் சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் ஜோராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



மேலும், 50 சதவிகித இருக்கைகளுடன், ரசிகர்கள் முக கவசம் அணிந்தும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டும், தனிநபர் இடைவெளியுடன் அமர்ந்து திரைப்படங்களை கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் புது படங்கள் வெளியாகாத நிலையில், ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் ஆங்கில திரைப்படங்களை மீண்டும் திரையிட திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.

இது குறித்து, கோவை அர்ச்சனா தர்ஷனா திரையரங்க உரிமையாளர் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், தீபாவளிப் பண்டிகை என்பதால் புது படங்கள் வெளியாக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...