கோவை: கோவையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க கோரி, அக்கழகத்தின் கூட்டாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு 200 க்கும் மேற்பட்டோர் இன்று போராட்டதில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க கோரி, அக்கழகத்தின் கூட்டாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு 200 க்கும் மேற்பட்டோர் இன்று போராட்டதில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 10 சதவீத போனஸ் அறிவிப்பை திரும்ப பெறுதல், 20 சதவீத போனஸ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூட்டாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு, இன்று போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில், தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக அரசு தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப் பேசி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 10 சதவீத போனஸ் அறிவிப்பை திரும்ப பெறுதல், 20 சதவீத போனஸ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூட்டாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு, இன்று போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில், தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக அரசு தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப் பேசி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.