கோவை: பொள்ளாச்சி - கோவை சாலை சிடிசி மேட்டில் மினி லாரியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி - கோவை சாலை சிடிசி மேட்டில் மினி லாரியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள சிடிசி மேடு பகுதியில் மினி லாரி ஒன்று ஆட்களின்றி நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் சாக்குப் பைகள் இருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, அங்கு விரைந்த மகாலிங்கபுரம் போலீசார் சாக்கு மூட்டைகளைப் பிரித்து பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், கேரளா எண் கொண்ட வாகனத்தில் புகையிலை பொருட்களை கடத்தி வந்து, வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.