கோவை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா முக கவசம் வழங்கப்படும், என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
கோவை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா முக கவசம் வழங்கப்படும், என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இதன்படி, ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கும் பணி நடைபெற்று வந்தது. இதுவரை, கோவை மாவட்டம் முழுவதும், 46 லட்சம் முக கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை, கோவை மாநகராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் 41 லட்சத்து 53 ஆயிரம் முககவசம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 1 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு மட்டுமே முககவசம் வழங்க வேண்டியதுள்ளது. கிராமப்புற பகுதிகளில் 5 லட்சத்து 26 ஆயிரம் முக கவசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் 4 லட்சத்து 32 ஆயிரம் முக கவசம் வழங்கப்பட வேண்டும். இந்த முக கவசம் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டன,’’ என்றார்.
இதன்படி, ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கும் பணி நடைபெற்று வந்தது. இதுவரை, கோவை மாவட்டம் முழுவதும், 46 லட்சம் முக கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை, கோவை மாநகராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் 41 லட்சத்து 53 ஆயிரம் முககவசம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 1 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு மட்டுமே முககவசம் வழங்க வேண்டியதுள்ளது. கிராமப்புற பகுதிகளில் 5 லட்சத்து 26 ஆயிரம் முக கவசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் 4 லட்சத்து 32 ஆயிரம் முக கவசம் வழங்கப்பட வேண்டும். இந்த முக கவசம் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டன,’’ என்றார்.