கோவை: கோவை பொள்ளாச்சியில் தமிழ்நாடு வாணிப கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் 30 சதவீத போனஸ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை பொள்ளாச்சியில் தமிழ்நாடு வாணிப கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் 30 சதவீத போனஸ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி ஜோதிநகரில், செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கிடங்கில் 40க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் தான் வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா நிதி நெருக்கடி என்ற காரணத்தை காட்டி போனஸ் குறைத்து வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இது பொருளாதார நெருக்கடியில் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு போதாது.

எனவே, போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி நுகர்வோர் வாணிப கிடங்கு முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் விடுப்பு கூட இல்லாமல் நிர்வாகத்திற்காக உழைத்தோம், ஆனால் இந்த 10 சதவீத போனஸ் என்பது மிகவும் குறைவு. எனவே 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பொள்ளாச்சி ஜோதிநகரில், செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கிடங்கில் 40க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் தான் வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா நிதி நெருக்கடி என்ற காரணத்தை காட்டி போனஸ் குறைத்து வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இது பொருளாதார நெருக்கடியில் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு போதாது.
எனவே, போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி நுகர்வோர் வாணிப கிடங்கு முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் விடுப்பு கூட இல்லாமல் நிர்வாகத்திற்காக உழைத்தோம், ஆனால் இந்த 10 சதவீத போனஸ் என்பது மிகவும் குறைவு. எனவே 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.