பொள்ளாச்சியில் தமிழ்நாடு வாணிப கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் 30 சதவீத போனஸ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவை பொள்ளாச்சியில் தமிழ்நாடு வாணிப கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் 30 சதவீத போனஸ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை பொள்ளாச்சியில் தமிழ்நாடு வாணிப கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் 30 சதவீத போனஸ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி ஜோதிநகரில், செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கிடங்கில் 40க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் தான் வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா நிதி நெருக்கடி என்ற காரணத்தை காட்டி போனஸ் குறைத்து வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இது பொருளாதார நெருக்கடியில் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு போதாது.



எனவே, போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி நுகர்வோர் வாணிப கிடங்கு முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் விடுப்பு கூட இல்லாமல் நிர்வாகத்திற்காக உழைத்தோம், ஆனால் இந்த 10 சதவீத போனஸ் என்பது மிகவும் குறைவு. எனவே 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...