திருப்பூரில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் - தாராபுரம் சாலை, பெரிச்சிபாளையம், பிகேஆர் லே அவுட், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.



இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வினோபா நகர் பகுதியிலுள்ள குடிநீர் விநியோகம் செய்யப்படும் வாட்டர் டேங்க்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகளிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, குடிநீர் விநியோகம் செய்யும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் விநியோகம் தடைபட்டதாகவும், மாலைக்குள் உடைப்பு சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...