திருப்பூரில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் - தாராபுரம் சாலை, பெரிச்சிபாளையம், பிகேஆர் லே அவுட், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.



இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வினோபா நகர் பகுதியிலுள்ள குடிநீர் விநியோகம் செய்யப்படும் வாட்டர் டேங்க்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகளிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, குடிநீர் விநியோகம் செய்யும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் விநியோகம் தடைபட்டதாகவும், மாலைக்குள் உடைப்பு சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...