கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று மாலை கோவை வந்தார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக கோவையில் இருந்து புறப்பட்டு, இன்று நீலகிரி சென்று அங்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளையும் புது வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று மாலை கோவை வந்தார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக கோவையில் இருந்து புறப்பட்டு, இன்று நீலகிரி சென்று அங்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளையும் புது வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, இன்று இரவு சூலூரில் பிரம்மாண்ட பொதுகூட்ட மேடை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகே உள்ள டிரான்ஸ்பாமருக்கு செல்லக்கூடிய மின்சார வயரில் திடீரென்று தீப்பற்றி மின்கசிவு ஏற்பட்டது.
முதலமைச்சர் கலந்துகொள்ள இருந்த அந்த நேரத்தில் திடீரென்று மின் கசிவு ஏற்பட்டதால், அங்கு இருந்த மின்சார ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் பதட்டம் அடைந்தனர். பிறகு, உடனடியாக அதை சரி செய்து மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர்.
ஆதலால், சிறிது நேரம் அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்று இரவு சூலூரில் பிரம்மாண்ட பொதுகூட்ட மேடை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகே உள்ள டிரான்ஸ்பாமருக்கு செல்லக்கூடிய மின்சார வயரில் திடீரென்று தீப்பற்றி மின்கசிவு ஏற்பட்டது.
முதலமைச்சர் கலந்துகொள்ள இருந்த அந்த நேரத்தில் திடீரென்று மின் கசிவு ஏற்பட்டதால், அங்கு இருந்த மின்சார ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் பதட்டம் அடைந்தனர். பிறகு, உடனடியாக அதை சரி செய்து மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர்.
ஆதலால், சிறிது நேரம் அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.