கொரோனா கண்காணிப்பு எதிரொலி: கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் 75 சதவீதம் குறைந்துள்ளது

கோவை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கோவை - கேரளா மாநில எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரமடைந்துள்ளன. இதனால், கோவை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது 75 சதவீதம் குறைந்துள்ளது, என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கோவை - கேரளா மாநில எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரமடைந்துள்ளன. இதனால், கோவை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது 75 சதவீதம் குறைந்துள்ளது, என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை வழியாக கேரள மாநிலத்திற்கு அதிகமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வந்த போதிலும் கடத்தல் தொடர்ந்து நடந்து வந்தது.

இதனிடையே, கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் பொதுப்போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி பகுதி, ஊரக பகுதிகளில் கூடுதல் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இதன் காரணமாக, இந்த இரண்டு மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டு இருந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கேரள மாநிலத்திற்கு மிக அருகில் கோவை மாவட்டம் உள்ளதால், வாளையாறு சோதனை சாவடி மட்டுமல்லாது அதிக கண்காணிப்பு இல்லாத சோதனை சாவடிகள் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது. கோவை மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு கோவை வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

கொரோனா தொற்றினால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஏப்ரல், மே மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டு இருந்தது. ஜூன் மாதம் ஊரடங்கில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. அதன் பின்னர், கோவை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது கடந்த சில மாதங்களில் 75 சதவீதமாக குறைந்து உள்ளது.

இருப்பினும், இருசக்கர வாகனங்களில் அரிசி கடத்தல் குறைந்த அளவில் நடைபெற்று தான் வருகிறது.. இதனை, உடனுக்குடன் கண்டறிந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகிறோம். கடந்த மாதம் மட்டும் 48,000 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...