கோவை: கோவை எட்டிமடை பகுதியை சேர்ந்த கோபால் மற்றும் விமலாதேவி தம்பதியரின் மகன் வைதீஸ்வரன் (17). இவர், அமிர்த வித்யாலயம் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த வந்தார்.
கோவை: கோவை எட்டிமடை பகுதியை சேர்ந்த கோபால் மற்றும் விமலாதேவி தம்பதியரின் மகன் வைதீஸ்வரன் (17). இவர், அமிர்த வித்யாலயம் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த வந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம், கோவில்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, மகனை இழந்த அவரது தாய் மற்றும் தந்தை, அவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவருடைய உடல் உறுப்புகள் தானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது குறித்து அவரது தந்தை கூறுகையில், மூளைச்சாவு ஏற்பட்ட தனது மகன் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததாகவும், எட்டிமடை கிராம வளர்ச்சிக்காகவும் ஆன்மீக பணிகளிலும் பெருமளவில் ஈடுபட்டு வந்ததால் உடல் உறுப்பு தானம் செய்ய அவரே விரும்பி இருந்ததாக கண்ணீர் மல்க கூறினார்.
இந்த நிலையில் கடந்த வாரம், கோவில்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, மகனை இழந்த அவரது தாய் மற்றும் தந்தை, அவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவருடைய உடல் உறுப்புகள் தானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது குறித்து அவரது தந்தை கூறுகையில், மூளைச்சாவு ஏற்பட்ட தனது மகன் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததாகவும், எட்டிமடை கிராம வளர்ச்சிக்காகவும் ஆன்மீக பணிகளிலும் பெருமளவில் ஈடுபட்டு வந்ததால் உடல் உறுப்பு தானம் செய்ய அவரே விரும்பி இருந்ததாக கண்ணீர் மல்க கூறினார்.