கோவையில் இடிந்து விழும் நிலையில் உள்ள தேவாலயத்திற்கு சொந்தமான கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ்!

கோவை: கோவை பெரியகடை வீதியில் சர்ச்சுக்கு சொந்தமான கட்டிடத்தை பயன்படுத்த தடை விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ்!


கோவை: கோவை பெரியகடை வீதியில் மைக்கேல் தேவாலயத்திற்கு சொந்தமான பழைய கட்டிடத்தை பயன்படுத்த தடை விதித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஓட்டினர்.

கோவையில் உள்ள பழைய கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றில் பலவீனமாக உள்ளகட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்க மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பெரிய கடைவீதியில் உள்ள மைக்கேல் தேவாலயத்திற்கு சொந்தமான வளாகத்தில், அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.



பின்னர் அந்த வளாகத்தில், உறுதித்தன்மை மிகவும் குறைந்து பாதுகாப்பில்லாமல் இருந்த பழைய கட்டிடம் ஒன்றிற்கு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினார்கள்.



இந்த கட்டிடத்தை இனி பயன்படுத்த கூடாது என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் மொத்தம் 40 கடைகள் உள்ளன. இதில், சுமார் 10 கடைகள் செயல்படுகின்றன. மீதி கடைகள் மூடப்பட்டுள்ளன. இது பாதுகாப்பு இல்லாத கட்டிடம் என நிர்ணயதாதால், நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது", என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...