கோவையில் இடிந்து விழும் நிலையில் உள்ள தேவாலயத்திற்கு சொந்தமான கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ்!

கோவை: கோவை பெரியகடை வீதியில் சர்ச்சுக்கு சொந்தமான கட்டிடத்தை பயன்படுத்த தடை விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ்!


கோவை: கோவை பெரியகடை வீதியில் மைக்கேல் தேவாலயத்திற்கு சொந்தமான பழைய கட்டிடத்தை பயன்படுத்த தடை விதித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஓட்டினர்.

கோவையில் உள்ள பழைய கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றில் பலவீனமாக உள்ளகட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்க மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பெரிய கடைவீதியில் உள்ள மைக்கேல் தேவாலயத்திற்கு சொந்தமான வளாகத்தில், அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.



பின்னர் அந்த வளாகத்தில், உறுதித்தன்மை மிகவும் குறைந்து பாதுகாப்பில்லாமல் இருந்த பழைய கட்டிடம் ஒன்றிற்கு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினார்கள்.



இந்த கட்டிடத்தை இனி பயன்படுத்த கூடாது என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் மொத்தம் 40 கடைகள் உள்ளன. இதில், சுமார் 10 கடைகள் செயல்படுகின்றன. மீதி கடைகள் மூடப்பட்டுள்ளன. இது பாதுகாப்பு இல்லாத கட்டிடம் என நிர்ணயதாதால், நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது", என்று தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...