கோவையில் இருவேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பத்திரமாக காப்பகத்தில் ஒப்படைப்பு!

கோவை: கோவையில் கைவிடப்பட்டு தவறான முறையில் கருவுற்ற நிலையில், குழந்தைகளை பெற்று அனாதையாக வீசிச் செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கோவை: கோவையில் கைவிடப்பட்டு தவறான முறையில் கருவுற்ற நிலையில், குழந்தைகளை பெற்று அனாதையாக வீசிச் செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கண்டெடுக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் முன்னிலையில் நேற்று காப்பக நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டன.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 10 நாட்களுக்கு முன் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை அனாதையாக வீசப்பட்டு இருந்தது. 2.4 கிலோ இருந்த அந்தப் பெண் குழந்தை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

அதேபோல, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த அக்டோபர் 14ம் தேதி பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தனியாக விடப்பட்டிருந்தது. 1.1 கிலோ எடையில் இருந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அரசு மருத்துவர்களின் சிகிச்சை சிகிச்சையின் பலனாக குழந்தையின் உடல் எடை 2.7 கிலோ ஆக அதிகரித்தது. அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு குழந்தைகளும் உடல் நலம் சீராகி ஆரோக்கியத்துடன் இருந்தனர்.

இந்த நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் 2 குழந்தைகள் காப்பக நிர்வாகிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தரம் கூறுகையில், அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு கருதி குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காப்பக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதில், பெண் குழந்தை தர்மபுரியில் உள்ள காப்பகத்திலும், ஆண் குழந்தை திருச்சியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார். நிகழ்ச்சியின் போது, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் காளிதாஸ், இருப்பிட மருத்துவ அலுவலர் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...