கோவை: கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜிஎன் மில் அருகே உள்ள, சுக்ராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர், லட்சுமி. இவர், மேற்கு தோட்டம், முருகன் கோவில் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று, முன்தினம் இரவு வழக்கும் போல், அவர் கடையை பூட்டி சென்றுள்ளார்.
கோவை: கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜிஎன் மில் அருகே உள்ள, சுக்ராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர், லட்சுமி. இவர், மேற்கு தோட்டம், முருகன் கோவில் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று, முன்தினம் இரவு வழக்கும் போல், அவர் கடையை பூட்டி சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலையில் கடையை திறக்க சென்ற போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்களை ஒரு வாகனத்தில் மர்ம நபர்கள் ஏற்றி சென்றதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம், அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சிகளை எடுத்து கொண்டு, துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க லட்சுமி சென்றுள்ளார். ஆனால், காவல்துறையினர் இது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி, அலட்சிய போக்கோடு செயல்பட்டதாக கூறி, லட்சுமி, மற்றும் அவரது குடும்பத்தினர், துடியலூர், காவல்துறையினரை கண்டித்து திடீரேன சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அவரது புகார் குறித்து, தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று காலையில் கடையை திறக்க சென்ற போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்களை ஒரு வாகனத்தில் மர்ம நபர்கள் ஏற்றி சென்றதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம், அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சிகளை எடுத்து கொண்டு, துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க லட்சுமி சென்றுள்ளார். ஆனால், காவல்துறையினர் இது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி, அலட்சிய போக்கோடு செயல்பட்டதாக கூறி, லட்சுமி, மற்றும் அவரது குடும்பத்தினர், துடியலூர், காவல்துறையினரை கண்டித்து திடீரேன சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அவரது புகார் குறித்து, தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.