கோவை: கோவையில், சமீபத்தில் பழங்கால ஐம்பொன் சிலை பாகத்தை விற்பதற்காக, இடையர் வீதி சந்திப்பில் சுற்றித்திரிந்த சலிவன் வீதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 36), செல்வபுரத்தைச் சேர்ந்த பாலவெங்கடேஷ் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில், சமீபத்தில் பழங்கால ஐம்பொன் சிலை பாகத்தை விற்பதற்காக, இடையர் வீதி சந்திப்பில் சுற்றித்திரிந்த சலிவன் வீதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 36), செல்வபுரத்தைச் சேர்ந்த பாலவெங்கடேஷ் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சிலை கடத்தல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திரத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (36), அருண் (40) மற்றும் தீனதயாளன் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து பழங்கால 33 கிலோ எடை கொண்ட மன்னர் சிலை 30 கிலோ எடை கொண்ட ராணி சிலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தபட்ட அனைவரையும் விசாரித்து, சிறையில் அடைத்த நிலையில், கைதான வெங்கடேஷுக்கு தொடர்ந்து காய்ச்சல் தலைவலி, சளி தொந்தரவு இருந்துள்ளது.
உடனடியாக சிறையில் உள்ள மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக, அவரை தனிமைப்படுத்தி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டார்.
போலீஸ் பாதுகாப்போடு அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலை கடத்தல் வழக்கில், கைதான நபருக்கு கொரோனா தொற்று உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.