கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் ரோடு பூமா்க்கெட், அம்மா உணவகம், பாரதி பார்க்கில் செயல்படும் பயோ-கேஸ், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் ரோடு பூமா்க்கெட், அம்மா உணவகம், பாரதி பார்க்கில் செயல்படும் பயோ-கேஸ், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம் ரோட்டில் புதியதாக ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் பூ மார்க்கெட்டை பார்வையிட்ட ஆணையாளர் அவர்கள் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடாபுடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, பழைய பூமார்க்கெட் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலும், அங்கு செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை பார்வையிட்டு அங்கு சமைத்துள்ள உணவுகளை சாப்பிட்டு உணவுகள் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்தார்.

பின்னர், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாநகராட்சி பாரதி பூங்கா அருகில் உணவுக்கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளிலிருந்து பெறப்படும் பயோ கேஸ் மூலம் மின் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு மக்கும் குப்பைகள் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல உதவி ஆணையர் ஏ.ஜே.செந்தில் அரசன், செயற்பொறியாளா் (ஸ்மார்ட் சிட்டி) சரவணகுமார், உதவி பொறியாளா் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம் ரோட்டில் புதியதாக ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் பூ மார்க்கெட்டை பார்வையிட்ட ஆணையாளர் அவர்கள் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடாபுடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, பழைய பூமார்க்கெட் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
மேலும், அங்கு செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை பார்வையிட்டு அங்கு சமைத்துள்ள உணவுகளை சாப்பிட்டு உணவுகள் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
பின்னர், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாநகராட்சி பாரதி பூங்கா அருகில் உணவுக்கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளிலிருந்து பெறப்படும் பயோ கேஸ் மூலம் மின் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு மக்கும் குப்பைகள் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல உதவி ஆணையர் ஏ.ஜே.செந்தில் அரசன், செயற்பொறியாளா் (ஸ்மார்ட் சிட்டி) சரவணகுமார், உதவி பொறியாளா் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனர்.