கோவை - ஷார்ஜா இடையே நாளை முதல், வாரம் இரு முறை சேவை வழங்கவுள்ளதாக, ஏர் அரேபியா அறிவிப்பு

கோவை: கோவை - ஷார்ஜா இடையே நாளை முதல் ஒவ்வொரு புதன்கிழமை தோறும், மேலும் ஒரு புதிய விமான சேவையை, 'ஏர் அரேபியா' நிறுவனம், துவக்கியுள்ளது.



கோவை: கோவை - ஷார்ஜா இடையே நாளை முதல் ஒவ்வொரு புதன்கிழமை தோறும், மேலும் ஒரு புதிய விமான சேவையை, 'ஏர் அரேபியா' நிறுவனம், துவக்கியுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவலுக்கு முன்பு, ஏர் அரேபியா நிறுவனம் சார்பில், கோவையிலிருந்து ஷார்ஜா இடையே விமான சேவையானது, வாரத்தில் ஐந்து நாட்கள் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது வாரந்தோறும் ஒருநாள் (சனிக்கிழமை) மட்டுமே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை நவம்பர் 4 ஆம் தேதி முதல் ஒவ்வொரு, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரம் இரண்டு நாட்கள் கோவை - ஷார்ஜா இடையே விமான சர்வீஸ் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து, விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "புதிய விமான சர்வீஸ் நாளை முதல் துவங்க உள்ளது. ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு அதிகாலை 3:30 மணிக்கு தரை இறங்கும் விமானம், மீண்டும் அதிகாலை 4:15 மணிக்கு ஷார்ஜா புறப்பட்டு செல்லும்."

மேலும், இந்த விமானத்தில் குறைந்தபட்சம் 2.5 டன் முதல் அதிகபட்சமாக 3 டன் வரை வரை சரக்கு ( cargo) ஏற்றப்படும். தற்போது, பூக்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் புக்கிங் செய்யப்படுகின்றன, என்று தெரிவித்தனர்.

இந்த கூடுதல் சேவை குறித்து, கொங்கு குளோபல் போரம் (KGF) இயக்குனர் டி நந்தகுமார் கூறியதாவது, " கோவை - ஷார்ஜா இடையே, மேலும் ஒரு விமான சர்வீஸ், 'ஏர் அரேபியா' நிறுவனம் துவக்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. எதிர்வரும் நாட்களில், விமான சர்வீஸ் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், கோவையின் பொருளாதாரம் மேம்பட வாய்ப்பு ஏற்படும்."

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...