குன்னூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது - போலீசார் விசாரணை!

நீலகிரி: குன்னூர் எம்.ஜி. காலனி பேருந்து நிலையத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த லியாண்டர்(24) என்பவரை வெலிங்டன் காவல் துறையினர் கைது செய்தனர்.


நீலகிரி: குன்னூர் எம்.ஜி. காலனி பேருந்து நிலையத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த லியாண்டர்(24) என்பவரை வெலிங்டன் காவல் துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இளம் மாணவ, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனிடையே, இதற்கு தீர்வு காணும் வகையில் குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குன்னூர் எம்.ஜி. காலனி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த லியாண்டர் என்பவரிடம் வெலிங்டன் காவல் ஆய்வாளர் பிலிப் தலைமையில் நடத்திய சோதனையில் அவரிடம் 180 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, லியாண்டரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...