கோவை: கோவை மாவட்டம் கோவைபுதூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
கோவை: கோவை மாவட்டம் கோவைபுதூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
அதே கல்லூரியில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தேவேஷ்வர் என்ற இளைஞரும் படித்து வந்துள்ளார். அப்போது, இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணத்தால் கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளதால், இருவரும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் காதலிப்பது பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது.
இதனால், பெண்ணின் பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனிடையே பெண்ணின் தந்தைக்கும், தேவேஷ்வருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தேவேஷ்வர் காதலித்த போது இளம்பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அப்பெண்ணுக்கு தெரியாமல் எடுத்த ஆபாச படங்களையும் தந்தையின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி திருமணம் செய்து வைக்கக்கோரி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, பெண்ணின் தந்தை குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தூத்துக்குடியில், இருந்த தேவேஷ்வரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.