கோவையில் கஞ்சா மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 49 பேர் கைது! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் கஞ்சா மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 49 பேர் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் கஞ்சா மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 49 பேர் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரன் உத்தரவின் பேரில், நேற்று இரவு போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அதில் 49 பேர் குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது.

அதில் கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கியவர்கள், பல கொலை மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளி வந்தவர்கள் என 49 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவர்களிடமிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறையினர் நேற்றிரவு நடத்திய சிறப்பு அதிரடி நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக மாநகரம் முழுவதும் 8 தனிப்படை போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...