கோவை: கோவை மாநகராட்சி வளாகத்தில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரவிழா பேரணியை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சி வளாகத்தில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரவிழா பேரணியை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை மூலம் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் வழிமுறைகளை கடைபிடித்து விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, இன்று மாநகராட்சி வளாகத்தில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரவிழா பேரணியை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் லஞ்சம் வாங்காதே, வசதிக்கேற்ப வாழப் பழகிக்கொள், நேர்மையை கடைபிடித்து பொதுமக்களின் செல்வாக்கை இழந்தவர்களை, லஞ்சத்தை அறவே ஒழிக்க ஒன்றுபட்டு சபதம் ஏற்போம், நேர்மை நமது வாழ்வின் வழிமுறை என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி மாநகராட்சி அலுவலர்கள் நடந்து சென்றனர்.

இப்பேரணியானது, மாநகராட்சி அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றடைகிறது.

200க்கும் மேற்பட்ட மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியை துவக்கி வைக்கும்பொழுது மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.மதுராந்தகி, விஜிலென்ஸ் ஆய்வாளர்கள் பரிமளாதேவி, எழிலரசி, சசிலேகா ஆகியோர் உடனிருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை மூலம் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் வழிமுறைகளை கடைபிடித்து விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, இன்று மாநகராட்சி வளாகத்தில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரவிழா பேரணியை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணியில் லஞ்சம் வாங்காதே, வசதிக்கேற்ப வாழப் பழகிக்கொள், நேர்மையை கடைபிடித்து பொதுமக்களின் செல்வாக்கை இழந்தவர்களை, லஞ்சத்தை அறவே ஒழிக்க ஒன்றுபட்டு சபதம் ஏற்போம், நேர்மை நமது வாழ்வின் வழிமுறை என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி மாநகராட்சி அலுவலர்கள் நடந்து சென்றனர்.
இப்பேரணியானது, மாநகராட்சி அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றடைகிறது.
200க்கும் மேற்பட்ட மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியை துவக்கி வைக்கும்பொழுது மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.மதுராந்தகி, விஜிலென்ஸ் ஆய்வாளர்கள் பரிமளாதேவி, எழிலரசி, சசிலேகா ஆகியோர் உடனிருந்தனர்.