திருப்பூரில் கோவில் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என 5 கிராமங்களைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் கோவில் நிலத்தை எக்காரணத்தைக் கொண்டு விட்டுக் கொடுக்க மாட்டோம், கோவில் நிலம் கோவிலுக்கே சொந்தம் என கூறி 5 கிராமங்களைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் கோவில் நிலத்தை எக்காரணத்தைக் கொண்டு விட்டுக் கொடுக்க மாட்டோம், கோவில் நிலம் கோவிலுக்கே சொந்தம் என கூறி 5 கிராமங்களைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் 200 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலுக்கு சொந்தமாக 11.16 ஏக்கர் நிலம் உள்ளது.

வருடந்தோறும் இந்த கோவிலில் சித்திரை மாத திருவிழா 2 வாரம் நடைபெறும். பிரம்மாண்ட திருவிழாவில், ஆண்டிபாளையம் சின்னண்டிபாளையம், சின்ன கவுண்டன் புதூர், குள்ளே கவுண்டன் புதூர், குளத்தூர் புதூர் ஆகிய 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 10,000 - மேற்பட்ட மக்கள் கொண்டாடும் விழா பெரும் விழாவாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் 11.60 ஏக்கரில் 9 ஏக்கர் நிலத்தை போலீஸ் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் காக்க 2013 முதல் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், கோவில் பயன்பாட்டுக்கு நிலம் வேண்டும், கோவில் நிலத்தை போலீசாருக்கு வழங்கக்கூடாது என 5 ஊர் பொது மக்கள் 2500க்கும் மேற்பட்டோர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பிரிவில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, கோவில் நிலம் கோவிலுக்கே சொந்தம், எக்காரணத்தைக் கொண்டும் கோவில் நிலத்தை விட்டுத்தர மாட்டோம் எனக்கூறி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...