வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை புலி; வளர்ப்பு நாயை தூக்கிச் சென்றதால் மக்கள் பீதி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை மத்தியில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புலி ஒன்று, வளர்ப்பு நாயை தூக்கி சென்றதால், அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை மத்தியில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புலி ஒன்று, வளர்ப்பு நாயை தூக்கி சென்றதால், அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

வால்பாறை மத்தியில் உள்ள வாழைத் தோட்டம் பகுதியில், ஆயிரக்கணக்கான குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலையில் நடராஜன் என்பவர் வீட்டின் வாசலில் ரத்தக்கரை இருந்துள்ளது.



இதனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் அங்குள்ள பல கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.



அப்போது, நடராஜன் வீட்டின் எதிர் வீட்டில் வாசலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், இன்று காலை 4 மணி அளவில் சிறுத்தைப்புலி ஒன்று நடராஜன் பக்கத்துவீட்டு வளர்ப்பு நாயை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு வருகின்றனர்.

சிறுத்தை புலியின் நடமாட்டம் மக்களிடையே, பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதியில் நடமாடும் சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...