கோவையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

கோவை: கோவையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சீரநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த மதன் குமார்(28) கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய இவர், மற்ற இணைய சூதாட்டங்களிலும் ஈடுபட்டு பணம் சம்பாதித்து இருக்கின்றார். அது அவருக்கு ஆர்வத்தை தூண்டவே தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கியவர், ஏராளமான பணத்தை இழந்துள்ளார்.

இந்நிலையில், இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என தொடர்ந்து விளையாடி வந்த அவருக்கு தோல்வியே கிடைத்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த மதன் குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். ஆன்லைன் மூலம் பணத்தை இழந்து இருந்த மதன்குமார் கடும் மன உளைச்சலில் இருந்து உள்ளார்.

இந்த நிலையில், நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஆன்லைன் பப்ஜி கேமிற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த மதன்குமார் தற்கொலை செய்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி அதனைவிட்டு வெளியேற முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...